தமிழக சிறையில் உள்ள உறவுகளுக்கு சட்ட உதவி...!

தமிழக சிறையில் உள்ள உறவுகளுக்கு சட்ட உதவி...!


தமிழ்நாட்டில் உள்ள புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கவியின்பன் (பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற போராளியின் வழக்கு சம்மந்தமான உதவிகளுக்காக “உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின்" கோரிக்கையினை ஏற்று குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பணத் தொகையினை மனமுவர்ந்து உடனடி உதவியாக அவரது வழக்கறிஞரான தமிழக மக்கள் உரிமைகள் கழகத்தின் தலைவர் திரு புகழேந்தி அவர்களிடம் கையளித்த உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் நோர்வேக்கான ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன் அவர்களுக்கும், யாழ்/கரவெட்டி மக்கள் ஒன்றிய பிரான்ஸ் கிளைக்கும் நன்றிகளைத் தெரித்துக் கொள்வதோடு…

துபாயில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பண உதவிகள் செய்து வருகின்ற மேற்குறிப்பிட்ட உலகத்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் நோர்வேக்கான ஒருங்கிணைப்பாளர் திரு. ஆனந்தன் அவர்களுக்கும், பிரித்தானியவிற்கான ஒருங்கினைப்பாளர் திரு. கரு. அனுசன் அவர்களுக்கும்… “உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்” தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-நன்றி

                             "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
(27.02.2014)

◆ குறிப்பு:

வழக்கு உதவிக்காக…

திரு. ஆனந்த் அவர்களால் இருபதினாயிரம் (20000) இந்தியா ரூபாக்களும், யாழ்/கரவெட்டி மக்கள் ஒன்றிய பிரான்ஸ் கிளையால்  இருபத்தையாயிரம் (25000) இந்திய ரூபாக்களும் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment